பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

267

பொருள்நளிை யளிக்கும் புலவர் பொன்மேரு மேதகு சந்தியப்பன் மெய்த்தவத்தால் காதல கைக் கவினுறத் தோன்றிக் கோதறு மேழிக் கொடியினை யுயர்த்த நாத முனிமன் நவின்றன. கைத் திவாகரம் அரும்பொருள் விளக்கத் தீபிகை அவாவற உணர்த்தும் ஆசிரிய நிகண்டோ டகலாப் பிங்கலம் அமர்ந்திடும் உரிச்சொல் நிகண்டு கயாகரம் நிகழ்த்தும் இரேவணர் சூத்திரம் பொதிய நிகண் டெனும் தொன்னூல் மாத்திர மன்றியும் மருவு தொல்காப்பிய முதனூல் விதிகளை முழுதுணர் அறிவால் இதமுள சொல்வழுப் பொருள்வழு இலாவகை ஆராய்ந் ததனை அமைதிபெற விரித்து ஏரார் இலக்கியம் ஏற்கும் படியுரை மேற்கோள் காட்டி மேம்படச் செய்தனன் பாற்பட இசைத்த பல்கலைப் புலமையும் நாற்றிசை எங்கணு நண்ணிய சிறப்புந் தோற்றமும் ஆற்றலுஞ் சோர்விலா நடையுங் கிளர்பெருஞ் செல்வமுங் கீர்த்தியும் ஓங்கி வளரளஞ் ஞான்றும் வயம்பெறு நிபுணன் கங்கை குலாதிபன் கடிகமழ் குவளை தங்கு புயாசலன் தரும குனலயன் உயர்சீர்ப் புதுவையின் உற்ற நயநப்பன் எனுமியற் பெயர்கொள் நாவலனே.” இப்பாடலிலிருந்து தெரியவரும் சில கருத்துக்

356ΥΤΙΤ6) 16ύΙ :--

வள மிக்க வேலூரில் சந்தியப்பன் என்னும் பெரி யார் வாழ்ந்தார். அவர் திருமாலை வழிபடுபவர்; அருட் கடல்; கல்வியே உருவானவர் பொருள் ஈந்து புலவர் களைப் போற்றுபவர். அவர் மகன் காதமுனி என்பவர்.

17