பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

288

தொகுதியும் பிற்காலத்தவரால் போற்றிக் கற்கப் படாமையால் வழக்கழிந்து போயின ; அதேைலயே சில சுவடிகளில் பத்துத் தொகுதிகளே காணப் படுகின்றன, எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பத்துத் தொகுதிகளே என்னும் கொள்கையினரோ, ‘ஆசிரியரால் பத்துத் தொகுதிகளே எழுதப்பட்டன . ஆனல், இங்கிகண்டும் திவாகரம் போல் பன்னிரண்டு தொகுதிகள் பெற்று முழுநிறைவு உடையதாகத் திகழ வேண்டும் என விரும்பி, பின் வந்த யாரோ, ஒலி பற்றிய பெயர் த் தொகுதியையும் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதியையும் புதிதாகப் புனைந்து சேர்த்திருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். -

இஃது இங்ங்னம் இருக்க, மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இருக்கும் சுவடியில், பன்னிரண்டாம் தொகுதியான பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி மட்டும் இல்லையாம் ; ஒலி பற்றிய பெயர்த் தொகுதி உட்பட மற்ற பதிைெரு தொகுதிகளும் உள்ளனவாம். இதிலிருந்து, முதலில் யாரோ ஒருவர் ஒலி பற்றிய பெயர்த் தொகுதியை எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் என்றும், பின்னர் வேருெருவர் பல்பொருள் கூட்டத்து ஒரு பெயர்த்தொகுதியை எழுதிச் சேர்த் திருக்கவேண்டும் என்றும் உணர இடமிருக்கிறதுஎன ஒரு சார் கருத்தும் கூறப்படுகிறது.

அச்சுப் பதிப்புகள் உரிச்சொல் நிகண்டு முதன் முதலில் 1840-ஆம் ஆண்டில் புதுச்சேரியில் அரசாங்க அச்சுக்கூடத்தில்

பதிப்பிக்கப் பெற்றது. இதில் பத்துத் தொகுதிகளே உள்ளன. அடுத்து, 1858-இல், யாழ்ப்பாணம்