பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

312

கோக்கின், மண்டல புருடர் இயற்றிய சூடாமணி கிகண்டுக்கு இருந்த செல்வாக்கு புலப்படும். அப்பெயரைப் பின்வந்த நிகண்டுகளும் பெற்றுக் கொண்டதில் வியப்பில்லை.

இனி நூலின் மாதிரிக்காக, ஒரெழுத் தொற்ருெரு மொழி என்னும் பிரிவிலிருந்து மூன்று நூற்பாக்கள் வருமாறு :" ஓர் இடைச் சொல்லும் உரைக்குங் காலமும் பேசில் வறிதும் பெருமையுங் கொன்னே அச்சமும் ஆங்கதற் காகும் என்ப.” ' காற்றும் வழியும் காலும் பொழுதும்

கூற்றும் அளவையும் குவிதேர் உருளையும் காம்பும் தறியும் கண்ணென் உருபும் வான்கொடிப் படரு மரமும் புதல்வரும் சரிபுனல் ஓடைத் தாழ்ந்த வதியும் உரியதோர் இலக்கமும் உரைக்கும் காலே.'

அருக்கன் முதலா வாய்ந்த ஒன்பதும் வலியும் கொள்கையும் வல்லிடை யூறும் கொலையும் பிசினமும் கோளெனத் தகுமே.”

மேலுள்ள மூன்று நூற்பாக்களிலும் முறையே கொன், கால், கோள் என்னும் மூன்று சொற்கட்குரிய பொருள்கள் தரப்பட்டுள்ளன. கொ, கா, கோ என்னும் ஒரெழுத்துக்களை யடுத்து ன், ல், ள் என்னும் ஒற்றுக்கள் வந்து ள் ள ைம யி ன், இச்சொற்கள் ஒரெழுத்து ஒற்று ஒருமொழி என்னும் தொகுதியில்

சேர்க்கப்பட்டன.