பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

ஆசிரிய நிகண்டு

இங்கிகண்டு ஆசிரிய விருத்தம் என்னும் பாவினத் தால் ஆனதால் ஆசிரிய நிகண்டு என்னும் பெயர் பெற்றிருக்கலாமோ என்னவோ !

ஆசிரியர் வரலாறு

இதன் ஆசிரியர் ஆண்டிப் புலவர் என்பவர். இவர் தொண்டை நாட்டில் செஞ்சிச் சீமையை யடுத்த ஊற்றங்கால் என்னும் ஊரினர்; பாவாடை வாத்தியார் என்பாரின் மகன்; ஞானப்பிரகாசர் என்பவரின் மான வர், சைவர். இவரை கற்கீரன் என அழைப்பதும் உண்டாம். சங்கினை யறுத்து வளையல் செய்யும் குலத் தினராம் இவர். பழந்தமிழ்ச் சங்கப் புலவராகிய நற்கீரரும் இக்குலத்தவர் எனச் சொல்லப்படுவதுண்டு. இதற்குச் சான்ருக,

  • சங்கறுப்பது எங்கள் குலம்

தம்பிராற்கு ஏது குலம்." என்று நற்கீரரே பாடியதாகக் கூறப்படும் செய்யுள் எடுத்துக் காட்டப்படுகிறது. எனவே, நற்கீரர் குலத் தைச் சேர்ந்த ஆண்டிப் புலவரும் முகமன் வழக்காக நற்கீரர் என அழைக்கப்பட்டார் போலும். நூலில் உள்ள

  • மன்னுசெஞ் சிச்சீமை சூழ்தொண்டை வளநாட்டில்

வாய்த்த ஆற் றங்காலில்வாழ் வளையறுப் போர்குலன் பாவாடை வாத்தியார்

மைந்தனும் நற்கீரனே.” 20