இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
329
329
மூன்று பொருள்கள் உண்டென ' முப்பேர் ' என்று
எண்ணிக்கையிட்டும், னகர எதுகைப் பாடலில் மன்றம்
என்னும் சொல்லுக்கு ஏழு பொருள்கள் உண்டென
- ஏழ்பேர்' என எண்ணிக்கையிட்டும் ஆசிரியர் கூறி
யுள்ளமை காண்க. இவ்வாறே நூல் முழுவதும் ஆங்
காங்கே பல சொற்களின் பொருள்களை எண்ணிக்கை
யிட்டுக் கூறியுள்ளார் ஆசிரியர்.
நூற்பயன்
அரும்பொருள் விளக்க நிகண்டின் இறுதிப் (700-
ஆம்) பாடலில், நூலைப் படிப்பதனால் உண்டாகும்
பயன் ஆசிரியரால் கூறப்பட்டிருப்பது ஒரு புதுமை.
இந்நிகண்டைக் கற்பவர்கள் சிறந்த புலமையும் செல்வ
மும் பெற்றுப் பெருமையுறுவராம். அப்பாடல் வருக:-
4் இருமையொன் றியதிருச் செந்தில் முருகோனை யேத்தும்
அருமருந்தையன் சொற்ற அரும்பொருள் விளக்கம் கற்றார்
பொருமுரண் டெறப்படுத்தும் புலமைநாற் றி றம் விளக்கும்
திருமருங் குறப்பொருத்தும் செருக்குட னிருப்பர் தாமே,”