பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341

341

பதினறு தொகுதிகளிலும் எண்ணுறு பாக்களு. மாக மொத்தம் எண்ணுாற்றெட்டு (808) வெண்டாக்கள் உள்ளன. 12,000 சொற்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில், சங்க கால வழக்காற்றுச் சொற்கள்முதல் பதினெட்டாம் நூற்ருண்டு வழக்காற்றுச் சொற்கள் வரை காணக்கிடக்கின்றன. மலையாளப் பகுதியில் வழக்கில் உள்ள தை (மரக்கன்று), ஆட்சி (வாரம்) முதலிய சொற்களும் இடம் பெற்றுள்ளன.

மற்ற நிகண்டுகளினும் இந்நூல் ஒரு புது மாதிரி யான அமைப்பு உடையது. நூல் முழுதும் கான்கு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படல மும் பல வர்க்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது முறையே அவை வருமாறு:

I உயர் திணைப் படலம்..............................2 (1) தெய்வ வர்க்கம் (2) மானிட வர்க்கம் II அஃறிணை உயிர்ப் பொருள் படலம்..........5. (1) நாற்கால் உயிர்ப் பொருள் வர்க்கம் (2) பறவை உயிர்ப் பொருள் வர்க்கம் (3) ஊர் உயிர்ப் பொருள் வர்க்கம் (4) நீர்வாழ் உயிர்ப் பொருள் வர்க்கம் (5) தாவர உயிர்ப் பொருள் வர்க்கம் III அஃறிணை உயிரில் பொருள் படலம்...........5 (1) இயற்கைப் பொருள் வர்க்கம் (2) செயற்கைப் பொருள் வர்க்கம் (3) இட வர்க்கம் (4) கால வர்க்கம்

(5) சினை வர்க்கம்