பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

346

இலக்கியக் களஞ்சியம் முதலிய பல நூற்கள் வெளி யிட்டிருக்கிருர் வேதகிரியார். தொகைப் பெயர் விளக் கம் என்னும் நிகண்டு நூலும் இவருடையதே.

வேதகிரியார் சூடாமணி ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி என்னும் பிரிவைச் சேர்ந்ததாகும்.

கந்த சுவாமியம்

இதன் ஆசிரியர் சுப்பிரமணிய தேசிகர் என்பவர். இவர் கீழ்வேளுர் என்னும் ஊரினர். ஆசிரியர் பழைய நிகண்டுச் சொற்களைத் தொகுத்து இப்படியொரு நிகண்டாக நூற்பா (சூத்திர) கடையில் எழுதி யுள்ளார். நிகண்டு நூற்கள் இப்படி இப்படி அமைக்கப் படவேண்டும் என இருபத்து நான்கு கட்டளைகள் (விதிகள்) இந்நூலில் கூறப்பட்டுள்ளன. அவ்வாறே இங்கிகண்டும் அமைக்கப்பட்டுள்ளது. சொல்லுவது போலவே செய்துகாட்ட வேண்டுமல்லவா ?

முதல் இரு தொகுதிகள் மட்டும் கி. பி. 1844-இல் அச்சாயின. முதல் தொகுதியில் 1318 சொற்களும், இரண்டாம் தொகுதியில் 1425 சொற்களும் இடம் பெற்றுள்ளன.

1844-ஆம் ஆண்டில் அச்சாகியிருப்பதை கோக் கின், ஆசிரியர் காலம் 19-ஆம் நூற்ருண்டின் முற் பகுதி என்பது புலகுைம்.

கந்தசுவாமி என்பவர், இந்நூலாசிரியராகிய சுப்பிரமணிய தேசிகரின் பெருமதிப்பிற்கு உரியவராய் இருந்திருக்கலாம், எனவே, அவர் பெயராலேயே கந்தசுவாமியம் என இங்கிகண்டினை அழைத்தாரோ

என்னவோ !