பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363

363

எடுத்துக் கொண்ட் போகர் நிகண்டு ஆயிரத்திரு நூறு என்னும் நூலுக்குள் செல்லலாம் :

போகர் சிவனையும் உமையையும் பிள்ளையாரையும் கலைமகளையும் சித்தர்களையும் மு னிவர் க 2ள யும் காப்பாக வணங்கிப் பின்னர் நூலைத் தொடங்குகிருர் : அக்காப்பு வருமாறு :

" அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம் போற்றி

அடுத்து நின்ற உமையவள்தாய் பாதம் போற்றி நிகண்டெனவே திருமூலர் நாயர் பாதம் போற்றி

நீங்காமல் காலாங்கி ஐயர் பாதம் போற்றி புகழ்ந்து நின்ற நா தாக்கள் ரிஷிகள் பாதம் போற்றி

புகழான வாக்குடைய வாணி பாதம் போற்றி முகந்துநின்ற குஞ்சாத்தின் பதத்தைப் போற்றி மூவுலகும் மெச்சுதற்கு நிகண்டு கேளே."

இப்பாடலில், தெய்வங்களுடன் திருமூலர், காலாங்கிநாதர் முதலிய சித்தர்களும் ஒருசேர வைத்து மதிக்கப்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

இங்கிகண்டில் உடற்கூறு-மருத்துவம் தொடர் பான பல்வகைப் பொருட்கட்குரிய பெயர்கள் விவர மாகக் கூறப்பட்டுள்ளன. மாதிரிக்காகக் கல்காரின் பெயர்களைக் கூறும் பாடல் வருமாறு :

' கல்நாரின் பெயர்தனையே கருதக் கேளு

கல்லுக்குட் சவளையாங் கடிய சீலை நாரு அல்நாரு வில்லுக்குள் சிலாவிந்து வாகு மாற்றிகம் பூங்கல்லின் கார மாகும் செல்நாரு சிலையின்ாவி கல்லு மாகும்

சிறு நாரு கல்லதுதான் சிவப்பு மாகும் முல்நாரு சத்துமாம் சுண்ண மாகு

முக்கிரமாங் கல்நாரின் பெயருந் தானே.” 23