பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

364

போகர் நிகண்டில் சித்தர்களின் வயது சொல்லப் பட்டிருப்பது மிகவும் வியப்பூட்டுகிறது. சித்தர் களின் வாழ்நாளின் குறைந்த எல்லை 120 ஆண்டு களாம்; உயர்ந்த எல்லே 700 ஆண்டுகளாம்; அவர்தம் சராசரி வயது 500 ஆண்டுகளாம். இவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்த சித்தர் இனம் இப்போது எங்கே போயிற்ருே தெரியவில்லை.

மேலும் இக்கிகண்டில், வெடியுப்பு திராவகம் செய் யும் முறையும், தங்கத்தில் இரசம் எடுக்கும் முறையும் இன்னும் பல முறைகளும் பல பாடல்களில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்பவர்கட்கு இக்குறிப்புக்கள் பெரிதும் உதவும். கடைகளில் விற்கக் கூடிய அறுபத்து நான்கு காட்டு மருந்துச் சரக்குகளின் பெயர்கள் இந்நூலில் அழகாகக் கூறப்பட்டுள்ளன.

இந்நிகண்டு கிடைத்தற்கு அரியதென்றும், இதிலே அரும்பெரும் பொருள்கள் பல அறிவிக்கப்பட் டுள்ளன என்றும், இஃது ஆயிரத் திருநூறு பாடல்கள் கொண்ட தென்றும் நூலின் இறுதிப்பாடலில் ஆசிரி யர் கூறியுள்ளார். அப்பாடல் வருமாறு:

' கிட்டாது இந்நூல்தான் எவர்க்குக் கிட்டும்

கிருபையுடன் சிவயோகி முனிவர்க்குக் கிட்டும் எட்டாத பொருள்களெல்லாம் இதிலே தோயும்

என்மக்காள் சித்தர்களே முனிவர்க் கென்றும் அட்டாத ஆயிரத் திருரு ருக.

அறைந்திட்டேன் நிகண்டெனவே பெயர் வகுத்தேன் திட்டாமல் எந்தனை நீர் எப்போதுந்தான்

திறமுட்னே துதிக்கு நூல் இது முற்றே.”