பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

384

என இரண்டாகப் பகுத்துள்ளார். குற்றெழுத்தை முதலிலே உடைய எதுகைச் சொற்களெல்லாம் குறில்கீழ் எதுகையிலும், நெட்டெழுத்தை முதலிலே உடைய எதுகைச் சொற்கள் எல்லாம் நெடில்கீழ் எதுகையிலும் அடக்கப்பட்டுள்ளன. அகம், நகம், மகம் என்பன போன்றவை குறிற்கீழ் எதுகைச் சொற்களாம். ஆகம், நாகம், மாகம் என்பன போன் றவை நெடிற்கீழ் எதுகைச் சொற்களாம். இவ்வாறு பல்வகை எதுகைச் சொற்களையும் தேடிப் பிடித்து அகர வரிசைப்படுத்திப் பொருள் எழுதியிருப்பது பெரிய முயற்சியாகும். செய்யுள் இயற்றுவோர்க்கு எதுகைச் சொற்கள் வேண்டுமாயின் இத்தொகுதியில் வந்து மொண்டு கொள்ளலாம்.

பாராட்டு ஆங்கில நாட்டில் 'சாமுவேல் ஜான்சன்' (Samuel Johnson) என்னும் ஆங்கிலப் பேரறிஞர் 1747- ஆம் ஆண்டில் ஒரு தலைசிறந்த ஆங்கில அகராதி இயற்றி னார்; அதற்காக மிகவும் பாராட்டப் பெற்றார். அந்த அகராதி தோன்றுவதற்குப் பதினைந்து ஆண்டுகட்கு முன்பே (1732-இல்) தமிழ் நாட்டில் சதுர் அகராதியை இயற்றிய வீரமாமுனிவர் மிகமிகப் பாராட்டத் தக்கவ ரன்றோ? கீதம் பால்க்

பெஸ்கி தமிழ்-இலத்தீன் அகராதி

சதுர் அகராதியேயன்றி, ஐரோப்பிய மொழிகள் ளுடன் தமிழ் பிணைந்த வேறு சில அகராதிகளும் வீரமா முனிவர் இயற்றினார். அவற்றுள், தமிழ்ச் சொல்லுக்கு நேரே இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் அகராதியும் ஒன்று. இஃது எழுதப்பட்ட

கா