பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

402

Rev. D. Bexell) என்பவரால் 1933- ஆம் ஆண்டிலும் வெளியாயின. இவ்வகராதியில் உள்ள ஒரு சிறப்பு அமைப்பாவது:

டாக்டர் க்ரால் என்பவர், ஐரோப்பிய மொழிகளில் வினைச் சொற்கள் வகைப்படுத்தப்பட்டு விளைவிகற்பப் பட்டி (Conjugation) கொடுக்கப்பட்டிருப்பது போன்று, தமிழ்வினைச் சொற்களின் விகற்பங்களையும் முக்காலங் கட் கேற்ப ஆராய்ந்து, வினைப் பகுதிகளைப் பதின் மூன்று வகையாகக் கணக்கிட்டிருக்கிறார். அதைப் பின் பற்றி, ஒவ்வொரு வினைப்பகுதியும் பதின்மூன்று வகை களில் இவ்வகையைச் சார்ந்தது எனக் கூறுகிறது இவ்வகராதி. இது மிகவும் சிறந்த அமைப்பன்றோ ?

இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்

இருபதாம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி இந்நூற்றாண்டினர் நன்கறிவர். இந்நூற்றாண்டில், போர்ச்சுகீசியம், இலத்தீன், பிரெஞ்சு ஆகிய மொழி களுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் புதிதாகத் தோன்றுவது நின்றுவிட, தமிழுக்குத் தமிழ் அகராதி களும் ஆங்கிலத்தொடு தமிழ் பிணைந்த அகராதிகளும் மட்டுமே புதிது புதிதாகத் தோன்றலாயின. ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றின பிரெஞ் சொடு தமிழ் பிணைந்த பழைய அகராதிகள் மட்டும், இருபதாம் நூற்றாண்டில், புதுச்சேரி மாதா கோயில் அச்சகத்தாரால் மறுபதிப்பு செய்யப்பெற்றன.

உரிமை பெற்ற இந்தியாவில் வேற்று நாட்டு மொழிகளின் ஆட்சி மறைய, இந்திய மொழிகள் தலை தூக்கத் தொடங்கியதால், சமசுகிருதம், இந்தி, மராட்டி, தெலுங்கு போன்ற இந்திய மொழிகளுடன் தமிழ் பிணைந்த அகராதிகள் இருபதாம் நூற்றாண்டில் தோன்றத் தொடங்கின. தமிழுக்குத் தமிழிலுங்கூட, பல்துறை யகராதி வகைகள் பல்கலாயின. இனி, இவ்விருபதாம் நூற்றாண்டு அகராதிகளைக் காலவாரி யாக ஆய்வாம் :

பதினெண் சித்தர் அகராதிகள் பதினெண் சித்தர் என்னும் பெயரால் பின்வரும் அகராதிகள் காணப்படுகின்றன :