433
433
வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர். வெளியீடு: சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம். காலம்: 1959-60 ஆம் ஆண்டுகள்
சிலேடை யகர வரிசை சிலேடை என்றால் இரு பொருள். இவ்வகராதியில், இரு பொருள் தரும் தொடர்கள் பல, அகரவரிசையில் அடுக்கப்பட்டு இரு இரு பொருள்கள் விளக்கப்பட்ட டுள்ளன. இ... தும் ஒரு வகைப் புது முயற்சியே. இதன் ஆசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்; வெளி யீடு: சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்; ஆண்டு : 1960.
மாதிரிக்காக, இவ்வகராதியிலுள்ள முதல் தொட ருக்கும் இறுதித் தொடருக்கும் கூறப்பட்டுள்ள இரு பொருள்கள் வருமாறு:
முதல் தொடர் :
அகங்கார நந்த: அகங்காரம் நந்த = ஆணவமானது கெட;
அகம் கார் அநந்த = உடல் கருமையாகப் பெற்ற திருமாலே.
இறுதித் தொடர் :
வையம் பொருவா : வையம் பொருவா = பூமி ஒப்பா காத;
வை அம்பு ஒருவா = கூரிய அம்பு நீங்காத