பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459

459

செய்ய முடியாதது போலவே எழுத்துக் கண்டுபிடித்து எழுதவும் அவற்றால் முடியவில்லை. இனவளர்ச்சி செய்யும் பறவை விலங்குகள் ஒன்றுக்கொன்று ஒலிக் குறிப்பால் கருத்தை யறிவித்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா? சேரமான் பெருமாள் நாயனார் என்னும் சேர மன்னர் மரபைச் சேர்ந்த சிவனடியார் பறவை விலங்குகள் கழறுவதையும் (பேசுவதையும்) அறியும் ஆற்றல் பெற்றிருந்ததனால் 'கழறிற்றறிவார்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றதாக அவர் வரலாறு கூறு கிறது. ஒருசார் விலங்கு முதலிய பிற உயிர்களும் மக்களைப்போல் ஆறு அறிவுகள் உடையவை எனத் தொல்காப்பியர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று. எனவே, பறவை விலங்குகளும் தொடர்ந்த ஒலித் தொகுப்பால் கருத்துக்களை அறிவித்துக் கொள் வதுண்டு என்ற முடிவுக்கு வரலாம்.

எனவே, குழந்தைகளின் ஒலித் தொகுப்பு, வேற்று மொழியாளரின் ஒலித் தொகுப்பு, பறவை விலங்கு களின் ஒலித் தொகுப்பு ஆகியவற்றில் - தனித்தனிச் சொற்கள் நமக்குப் புரியவில்லையாயினும் அந்த ஒலித் தொகுப்புகளுக்குப் பொருள் உண்டு. அந்த ஒலித் தொகுப்புகளில் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு செயலையும் குறிப்பதற்குரிய ஒலிக் கூறுகள் அடங்கி யுள்ளன. ஆனால் அவை நமக்குத் தெரியவில்லை. இது போலவேதான், முதற்கால மக்களின் ஒலித் தொகுப்பும் ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு செயலையும் குறிப் பதற்குரிய ஒலிக் கூறுகளை உள்ளடக்கிக் கொண் டிருந்தது; நாளடைவில் ஒவ்வோர் ஒலிக் கூறும் ஒவ் வொரு சொல்லாகப் பிரிந்து திருத்தம் பெற்றது.

29