பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

478

பெயரும், பனியைப் போக்குவதால் பனிப்பகை என்ற பெயரும், பகலில் தெரிவதால் பகலவன் என்ற பெயரும், தினத்தை உண்டாக்குவதால் தினகரன் என்ற பெயரும், கோள்களுள் தலைமையும் உயர்வும் உடைமை யால் வேந்தன், சான்றோன் என்ற பெயர்களும், அலரச் செய்வதால் அலரி என்ற பெயரும், இன்னும் இவ்வாறே எண்ணிறந்த பெயர்களும் உள்ளன.

(7) வடமொழி போன்ற வேற்று மொழிகளி லிருந்தும் பல பெயர்கள் வந்து ஒரே பொருளில் வழங்குவதுண்டு. எடுத்துக் காட்டாக, ஞாயிற்றைக் குறிக்க, பதங்கன், சூரியன், உதயன் , விரிச்சிகன், மார்த்தாண்டன், கிரணன், பாநு , திவாகரன், இரவி, பாற்கரன், அருணன், தபனன் , அருக்கன், ஆதித்தன்

முதலிய வட மொழிப் பெயர்கள் தமிழில் வந்து வழங்கு வது காண்க. இது போலவே வழியைக் குறிக்க, சரி, தாரை, மார்க்கம், அயனம் முதலிய வடமொழிப் பெயர்கள் தமிழில் நடமாடுவதை யறிக.

(8) மற்றும், பொருட்டு (காரணம்) கண்டுபிடிக்க முடியாத நிலையிலே ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் இருப்பதும் உண்டு. இந்நிலையில், வட்டை, வயவை, இடவை முதலிய பெயர்கள் வழி யென்னும் பொருளைக் குறிக்கின்றன. இப்படிப் பார்க்குங்கால் வழி என்னும் ஒரே பொருளைக் குறிக்கப் பல பெயர்கள் அமைந் துள்ளமை புலனாகும். இதனை,

(வழியின் பெயர்கள்)

சரி, நெறி, ஒழுக்கம், தாரை, யாறு,

வதி, அதர், மார்க்கம், இயவை, நடவை, பதவை, செப்பம், அயனம், இடவை,