பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

480

கலங்கள் (பாத்திரங்கள் ) , ஆடையணிகள் வைத்திருந் தாலும், அவற்றுள் ஒரு சிலவே எப்போதும் பயன் படுத்தப்படுகின்றன; மற்றவை சிறப்பு நாட்களில் - சிறப்பு வேளைகளில் மட்டுமே பயன்படுத்தப்படு கின்றன. பேச்சு வழக்குச் சொற்கள் எப்போதும் பயன்படும் ஆடையணிகள் போன்றவை, செய்யுள் வழக்குச் சொற்களோ, சிறப்பு நாட்களில் பயன் படுத்தப்படும் ஆடையணி கலங்கள் போன்றவையாம்.

சுருங்கச் சொல்லின் , செய்யுளிலும் சரி - பேச்சிலும் சரி - ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் நடுநடுவே வரும் - போகும்; இருப்பினும், ஏதோ ஒன்று அல்லது இரண்டு மட்டுமே இறுதிவரை யிருந்து பேர் செல்லும்.

ஒரு பொருளுக்கு எண்ணற்ற பெயர்கள் இருக்குமே யானால், அப்பொருள் பற்றி மாந்தர்க்கு மிகுந்த ஆர்வம் இருந்தது எனக் கொள்ளலாம்' - என 'பிரீல்' (Breal) என்னும் அறிஞர் கருத்துத் தெரிவித் துள்ளார். இக்கருத்திலும் உண்மை யில்லாமற் போகவில்லை. மக்களினம் வாழ்க்கையில் எவ்வெப் பொருள்களோடு மிகுதியாகத் தொடர்பு கொள்கிறதோ, அவ்வப் பொருள்கட்குப் பெயர்கள் பல ஏற்படுவது இயல்பே! ஆனால் இக்கருத்திற்கு ஒரு சில பொருள்கள் மட்டும் விதிவிலக்காகவும் இருக்கலாம்.

ஒரு பொருளுக்குப் பல பெயர்கள் தோன்றிய கதை இதுதானே!