பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

484

இயல்பே! காட்டாக, கார், வரை என்னும் இரு சொற் களை எடுத்துக் கொள்வோம் :

கார் என்னும் ஒரே சொல், கருமை நிறம் என்னும் பொருளோடு, கருமை நிறமுடைய 'மேகம்' மேகத்தி லிருந்து வரும் 'மழை', மழையால் கிடைக்கும் 'தண்ணீர்', கரிய மேகம் காணப்படுகிற மழைக்காலம் (கார்காலம் ), கார் காலத்தில் விளையும் கார் நெல், அதைக்கொண்டு சமைத்த 'சோறு' முதலிய பொருள் T களையும் தருகிறது. இப்பொருள்கள் எல்லாம் ஒன்றோ டொன்று ஒவ்வொரு வகையில் தொடர்புடையன வல்லவா? இது போலவே, வரை என்னும் ஒரே சொல், கோடு, கோடு போல் தெரிகிற கணு, கணுக்களையுடைய மூங்கில், மூங்கில் வளரும் மலை, மலையின் உச்சி, பக்க மலை, மலையில் உள்ள கல் முதலிய பொருள்களைத் தருகிறது. கார், வரை என்னுஞ் சொற்கள் எத்தனை பொருள்கள் தருகின்றனவோ, அத்தனை பொருள் கட்கும் தனித்தனிப் பெயர்கள் வேறு இருப்பது காண்க. எல்லாப் பொருள்கட்கும் தனித்தனிப் பெயர்கள் இருப்பதால் மொழியில் சோல்லேழ்மை யிருப்ப தாகக் கருத முடியாது. எனவே, தொடர்புடைய பல பொருள்களில் ஒரே சொல்லை மக்கள் வழங்குவது, ஒரு வகை மொழிச் செட்டேயாகும் என்பது புலனாகலாம்.

இவ்வாறு மக்கள் மேற்கொண்டுள்ள ஒருவகை மொழிச் செட்டைத்தான் ஆகு பெயர் ' என இலக்கண நூலார் அழைப்பதாகத் தெரிகிறது. ஒரு பொருளின் பெயர் அப்பொருளைக் குறிக்காமல் அதனோடு தொடர் புடைய வேறொரு பொருளுக்கு ஆகி வருவது ஆகுபெயர் ஆகும். எடுத்துக்காட்டாக, புதுச்சேரி என்னும் பெயர் ஓர் ஊரைக் குறிக்கிறது. புதுச்சேரி திரண்டு