பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

488

யெல்லாம் ஆயா என்றே அழைக்கும். கிழவிகளில் அத்தையும் இருக்கலாம் - பெரிய தாயாரும் இருக்க லாம் - அதைப் பற்றிக் குழந்தைக்குக் கவலையில்லை; அத்தை, பெரியம்மா முதலிய சொற்கள் குழந்தைக்குத் தெரியாதாகையால் எல்லோருமே ஆயாதான். தன் தாத்தாவைத் தெரியுமாதலால், வயதான ஆடவர்கள் மாமா, பெரியப்பா முதலிய முறையினராயிருந்தாலும் குழந்தைக்கு எல்லோருமே தாத்தாதான். அண்ணன் அக்கா முதலிய அனைத்துப் பெயர்களும் அப்படியே. மற்றும், தின்பண்டங்களுள் ஒவ்வொன்றிற்கும் ஒவ் வொரு தனிப் பெயர் இருந்தும், எல்லாவற்றையுமே 'மம்மு' என்னும் ஒரு பெயரால்தான் குழந்தை குறிப் பிடும். 'கொஞ்சம் கொஞ்சோண்டு' என்ற சொல் வழக்கு குழந்தைக்குத் தெரியும்; எனவே, தன்னிலும் சின்ன குழந்தைகளைக் கண்டால், சின்ன பாப்பா - சின்ன தம்பி என்று சொல்லத் தெரியாமல், 'கொஞ் சோண்டு பாப்பா - கொஞ்சோண்டு தம்பி' என்றே சொல்லும். இந்தக் 'கொஞ்சோண்டு' என்ற சொல் மட் டும் எப்படி தெரிந்ததென்றால், - மம்மு ரொம்ப கொடுக்கலே - கொஞ்சோண்டு கொடுக்கற' என்று அம்மாவிடம் அடிக்கடி சண்டை பிடித்துப் பழக்கப் பட்டதாகும். எப்படா வந்தே' என்று கேட்டால். நேற்று என்னும் சொல் தெரியாத குழந்தை ' நாளைக்கு வந்தேன்' என்று சொல்லும். நாளை என்னும் சொல் லுக்கு நேற்று என்ற ஒரு பொருளும் குழந்தைகளின் அகராதியில் உண்டு. அண்ணன் எங்கே' என்று கேட்டால், 'அவன் தாராந்து (தாரை வார்ந்து) போயிட்டான்' என்று குழந்தை சொல்லும். குழந்தைகள் விளையாட்டுப் பொருள்களைத் தாரைவார்த்து (காணாதடித்து இருப்பதுண்டு. அப்பொருள்களைப்

பட