பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/503

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

499

499

ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் வினைவேறு படாஅப் பல பொருள் ஒரு சொல் நினையுங் காலைக் கிளந்தாங் கியலும். குறித்தோன் கூற்றம் தெரித்து மொழி கிளவி. என்னும் நூற்பாக்களாலும், உரியியலில் உள்ள, ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் பலசொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் தத்தம் மரபிற் சென்று நிலை மருங்கின் எச்சொல் லாயினும் பொருள் வேறு கிளத்தல்.

என்னும் நூற்பாவாலும் அறிந்து கொள்ளலாம்.

ஒரு வாக்கியத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சொல் லின் பொருளைத் தெளிவாக அறிந்து கொள்ளுதற்கு வேண்டிய சூழ்நிலை அவ்வாக்கியத்தில் அமைந்திருக்க வில்லை யென்றால், அது குழப்பமுடைய வாக்கிய மாகவே கருதப்படும். இந்நிலை செய்யுள் வழக்கில் இருந்தாலும் இருக்கும்; ஆனால் பேச்சு வழக்கில் பெரும் பாலும் இராது. சில வேளைகளில் பேச்சு வழக்கில் நகைச்சுவைக்காக இரு பொருள் தரும் ஒரு சொல்லைப் பயன்படுத்தி மக்கள் பேசுவதுண்டு. எடுத்துக் காட் டாக , - 'நீர் வேண்டும்' என்னும் பேச்சில், தண்ணீர் வேண்டும் - நீங்களே வேண்டும் என இரு பொருள் படும்படியான நகைச்சுவை அமைந்திருப்பது காண்க. இதுபோன்ற சூழ்நிலையில் பேசுபவரும் கேட்பவரும் சிறிதும் குழப்பமின்றிப் பேசி நகைச்சுவை விருந்தைச் சுவைப்ப தியற்கை.

இவ்வாறின்றிக் குழப்பமான நிலையில் பல பொருள் ஒரு சொல் ஒன்று செய்யுளில் வருமாயின்,