54
“விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்.”
“கருவி தொகுதி.” (கூட்டம்)
“இலம்பாடு, ஒற்கம் ஆயிரண்டும் வறுமை;”
“பே, நாம், உரும் என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள.”
“வாள் ஒளியாகும்.”
“உசாவே சூழ்ச்சி.” (ஆலோசனை)
“வயா என்கிளவி வேட்கைப் பெருக்கம்.”
“கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள.”
“புதிதுபடற் பொருட்டே யாணர்க் கிளவி.” (யாணர்-புதுவருவாய்)
“யாணுக் கவினாம்.” (யாணு—அழகு)
“ஐ வியப்பு ஆகும்.”
“வையே கூர்மை.”
“எறுழ் வலி ஆகும்.”
மேலுள்ள நூற்பாக்களில் பல வளமான அரிய அழகிய புதிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் கண்டோம்; அரிய சொற்கட்கிடையே தீர்தல், தீர்த்தல், பழுது, முழுது, செழுமை ஆகிய எளிய சொற்களையும் கண்டோம்; நமக்கு எளியனவாகத் தோன்றும் இச்சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் அரியனவாகக் கருதப்பட்டன போலும். மற்றும், தொல்காப்பியர் ‘கடி’ என்னும் ஓர் உரிச் சொல்லுக்குப் பன்னிரண்டு பொருள்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்:–