பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/77

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

73

 தண்டனார் என்னும் பெயரையும் ஏன் ஆராயக் கூடாது?

மான் கொம்பை நிமிர்த்தி எவரும் தடியாகக் கொள்ளார்; எனவே, தாம் பாடிய பாடலிலுள்ள தொடரால் பெயர்பெற்ற தொடித்தலை விழுத்தண்டினார் போலவே, கலைக்கோட்டுத் தண்டனாரும் தொடரால் பெயர் பெற்றிருக்கலாம். தனித்தனி நூலாக மதிக்கப்படுகின்ற திருமுருகாற்றுப்படை, முல்லைப் பாட்டு, குறிஞ்சிப்பாட்டு முதலிய நீளமான பத்துப் பாட்டுக்களைப் போல ஒரு நீளமான பாடல் இருந்திருக்கலாம்; அதற்கு நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் கிடைக்காமல் விடுபட்டுப் போயிருக்கலாம். இந்நிலை பழங்கால நூல்கள் சிலவற்றிற்கு உள்ளதுதானே! எனவே நூற்பெயரும் ஆசிரியர் பெயரும் தெரியாத அந் நெடும்பாட்டு நூலில் ‘கலைக் கோட்டுத் தண்டு, என்னும் தொடர் சிறப்பிடம் பெற்றிருக்கலாம்’ அதனால், அத்தொடராலேயே நூலையும் ஆசிரியரையும் பெயர் சுட்டி அழைத்திருக்கலாம். ஆகவே, அந் நூலுக்குக் கலைக்கோட்டுத் தண்டு என்னும் பெயர் எந்த நிமித்தம் (காரணம்) கருதியும் வைக்கப்பட்டதன்று; ஏதேனும் ஒரு பெயர் வேண்டுமே என்பதற்காக இடுகுறியாக இடப்பட்ட பெயரேயென்பது புலனாகலாம். இதனால்தான் நன்னூல் உரைகாரரும் களவியல் உரைகாரரும் இடுகுறியாற் பெயர் பெற்ற நூலுக்கு எடுத்துக்காட்டாகக் கலைக்கோட்டுத் தண்டைக் காட்டியுள்ளனர். எனவே, கலைக்கோட்டுத் தண்டு என்பது நிகண்டு நூலன்று; வேறு துறையைச் சேர்ந்த நூலேயாகும். இதனை ஒரு