பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/83

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

79



பெயரிட்டதற்குச் சிலர் வேறு காரணம் கூறுகின்றனர். அதாவது, இந்தத் திவாகர நிகண்டுக்கு முன்னாலேயே, திவாகரம் என்னும் பெயருடைய இன்னொரு நிகண்டு இயற்றப்பட்டிருந்தது. திவாகரர் என்னும் பெயருடைய வேறொருவர் அதனை இயற்றியிருக்கலாம். ஒரு பெயரே ஒரே காலத்தில் ஒரே தெருவில் பலர்க்கு இருக்கும்போது, ஒரு பெயரையே பல காலத்தில் வாழ்ந்த பலர் வைத்துக் கொண்டிருந்திருக்கலாமன்றோ? எனவே, அந்தப் பழைய திவாகரத்துக்கும் இந்தப் புதிய திவாகரத்திற்கும் வேறுபாடு தெரிவதற்காகப் பழைய திவாகரத்தை ‘ஆதி திவாகரம்’ என்றும், புதிய திவாகரத்தைச் ‘சேந்தன் திவாகரம்’ என்றும் பிற்காலத்தவர் குறியிட்டு அழைத்தனர். என்பதுதான் சிலர் கூறும் புதுக்காரணம். இதனை மறுப்பவரும் உளர். அவர்மறுப்பு வருமாறு:—

சேந்தன் திவாகரத்தைத் தவிர, ஆதி திவாகரம் என வேறொரு நிகண்டு இருந்திருக்க முடியாது. அதற்கு எந்தச் சான்றும் கிடைத்திலது. சில உரை நூற்களுள் சேந்தன் திவாகரப் பாக்களே எடுத்தாளப்பட்டுள்ளன; ஆதி திவாகரப் பாடல் என்ற பெயரில் எதுவும் எடுத்தாளப்படவில்லை. மேலும், பிற்கால மக்களால் பெருவாரியாகப் படித்துப் போற்றப்பட்ட சூடாமணி நிகண்டின் ஆசிரியராகிய மண்டல புருடர், தமக்குமுன் இருந்த திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டு நிகண்டுகளையும் முதல் நூல்களாகக் கொண்டு எளிய முறையில் சூடாமணி நிகண்டைத் தாம் எழுதியிருப்பதாகக் கூறியுள்ளார். ‘இங்கிவை இரண்டும் கற்க’ என மண்டல புருடர் இரண்டு என்னும் எண்ணிக்கையிட்டு முடிவாகக் கூறி