பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/84

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80



விட்டதனாலே, திவாகரம், பிங்கலம் என்னும் இரண்டு நிகண்டுகளைத் தவிர, ஆதிதிவாகரம் என வேறொரு நிகண்டு முற்காலத்தில் இருந்திருக்க முடியாது. அப்படியிருந்திருந்தால் மண்டலபுருடர் அதனையும் கூட்டி மூன்றாகக் குறிப்பிட்டிருப்பார். எனவே, நிகண்டுகளுக்குள் முந்தியது சேந்தன் திவாகரமே. அதன் பழமையை நோக்கி அதனையே ஆதி திவாகரம் என்றும் அழைத்திருக்கக்கூடும். ஆகவே, ஆதி திவாகரம், சேந்தன் திவாகரம் என்னும் இரண்டும் ஒரு நிகண்டின் பெயர்களே. இந் நுட்பம் உணராதார் இரண்டினையும் தனித்தனி நிகண்டெனக் கருதியிருக்க வேண்டும்”.

மேலே இருசாரார் கருத்துக்களைக் கண்டோம். நடுநிலைமையுடன் இரு கருத்துக்களையும் அணுகி ஆராயின், ஆதி திவாகரமும் சேந்தன் திவாகரமும் ஒன்றாக இருக்க முடியாது; திவாகரம் என்னும் பெயரில் இரண்டு நிகண்டுகள் இருந்ததனால்தான், இரண்டிற்கும் வேறுபாடு தெரிய, முந்தியதை ஆதி திவாகரம் என்றும், சேந்தனால் தூண்டி எழுதப்பட்ட பிந்தியதைச் சேந்தன் திவாகரம் என்றும் அழைத்தனர்–என்னும் முதல் சாராரின் கருத்தே சரியானது என்பது புலப்படும். ‘இல்லாமல் பிறவாது–அள்ளாமல் குறையாது’ என்றபடி, ஆதி திவாகரம் என ஒன்று இல்லாமல் இந்தப் பேச்சு எழுந்திருக்க முடியாது. அப்படியில்லாதிருந்தால் சேந்தன் திவாகரம் என அழைக்க வேண்டிய வேலையே இன்றி, வெறுமையாய்த் திவாகரம் என்றே அழைத்திருப்பர். மேலும், ஆதி திவாகரம் இல்லாதிருந்தால், சேந்தன் திவாகரம் எனப் பெயர் வந்ததற்குக் காரணமாக இரண்டு விதமான கருத்துத் தெரிவிப்பதோடு ஆராய்ச்சியாளர்கள் அமைந்துவிட்டிருப்பார்கள் அதாவது, திவாகரர் தம்மை ஆதரித்த சேந்தனுக்கு