பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/88

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84

84

வரலாற்றுப் பிரிவைச் சாரும் தகுதி சேந்தனுக்கு மட்டும் உரியதன்று-திவாகரருக்கும் சரி-இனி சொல்லப் போகும் நிகண்டுகளின் ஆசிரியர்களுக்கும் சரி இது பொருந்தும். எனவேதான் இம் முவகை வரலாற்றுத் தகுதி ஈண்டு இவ்வளவு விரிவாக எழுதப்பட்டது. இனி, சேந்தனைப் பற்றிய செய்திகளைக் காண்போம்:

சேந்தன் சோழ நாட்டுக் காவிரிக் கரையை ஒட்டிய அம்பல் என்னும் பகுதியின் தலைவன்; அருவந்தை என்னும் ஊரினன்; (அதாவது தஞ்சை மாவட்டத்தான்) கல்வி கேள்வி நிரம்பியவன்; தமிழ், வடமொழி என்னும் இருமொழிகளிலும் வல்ல செந்தமிழன். பல பாடல்களும் நூல்களும் எழுதிய சிறந்த பாவலன்-நாவலன். இறைவியின்மேல் செந்தமிழ் மாலை அந்தாதி பாடியுள்ளான். இராமரது விற்போர், பாரதப் போர், தாருகன் வதை முதலியவை பற்றியும் பாடியுள்ளான்.

சிறந்த மூதறிவாளன். நல்ல நோக்கினன். நாகரிக நாட்டமுடையவன். மறம் நீக்கி அறம் பேணுபவன். ஐம்புலன்களை வென்றவன். குடிமக்களைத் தன் குடை நிழற்கீழ்க் குளிர்ச்சியுடன் காப்பவன். பரிசிலர் பலர் வரினும் இல்லை என்னாது கொடுக்கும் கொடையாளி. பகைவர் வரின் வெல்லத்தக்க படையாளி. தேவரே போன்ற சிறந்த தோற்றமுடையவன். புலவர்களை ஆதரித்துப் பெரும்புகழ் பெற்றவன். ஒளவையார், திவாகரர் முதலிய புலவர் பெருமக்களால் புகழ்ந்து பாடப் பெற்றுள்ளவன். ஒரு நாட்டின் தலைவனுக்கு இன்னும் என்ன வேண்டும்? ஏறக்குறைய எல்லா நல்லியல்புகளும் இருக்கின்றனவன்றோ?

சேந்தனைப் பற்றிய இவ்வளவு செய்திகளையும் திவாகர நிகண்டினுள் காணலாம். திவாகரர் தம்