பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 & தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்

பார்ப்பதற்கே அச்சமாயிருக்கும். சாதாரணத் தோற்றத்திலேயே இவ்வாறு அச்சமேற்படுமானால் வேடத்தையும் போட்டுக்கொண்டு நிற்கும்போது எப்படி இருந்திருக்கும்? முத்துச்சாமி சேர் சங்கரதாசர்

ஒரு புலவரை மற்றொரு புலவர் பாராட்டுவது அபூர்வமாக இருந்த அந்தக் காலத்தில் சுவாமி களுக்கும் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்களுக்கும் இருந்த அன்புத் தொடர்பைப்பற்றிப் பல பெரியார்கள் வியந்து கூறக் கேட்டிருக்கிறேன். இரு பெரும் புலவர்கள், அதுவும் ஒரே துறையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒற்றுமையோடு பழகிய பான்மையைக் கண்டு எல்லோரும் அதிசயப் பட்டிருக்கிறார்கள்.

சுவாமிகள் காலஞ்சென்றபின் தத்துவ மீன லோசனிசபையில் கவிராயர் அவர்கள் சில மாதங்கள் ஆசிரியப் பொறுப்பை ஏற்று மதுரைவீரன், மன்மத தகனம் முதலிய நாடகங்களைப் பயிற்றுவித்தார். எங்களெல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு கவிராயர்அவர்கள் சுவாமிகளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைப்பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.

கவிராயர் அவர்கள் பெரும்பாலும் பாட்டின் கடைசி வரியில் தனது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. அக்காலத்திலிருந்த புலவர்களிற்