பக்கம்:தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.கே. சண்முகம் & 51

பலரும் இவ்வாறு 'முத்திரை அடி பொறித்துத்தான் பாடலை முடிப்பது வழக்கம். சுவாமிகள் ஒருவர் மட்டும் இதில் மாறுபட்ட கருத்துடையவர். தமது பாடல் ஒன்றில்கூட பெயர் முத்திரை வைத்ததே யில்லை. பிற்காலத்தில் பெயர் விளங்குவதற்காக வாவது ஆசிரியன் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியமெனக் கவிராயர் அவர்கள் சுவாமிகளிடம் அடிக்கடி வற்புறுவத்துவாராம். சுவாமிகள் இதற்கு அடியோடு மறுத்துவிடவே கவிராயர் அவர்கள்தாம் எழுதிய இராமாயண நாடகப் பாடல்கள் சிலவற்றில், 'முத்துச்சாமி சேர் சங்கரதாசர்' என்று இருவர் பெயரையுமே முத்திரைஅடி'யாக வைத்துவிட்டார். இலங்காதகனம் நாடகத்தில் அனுமான் பாடும் சில பாடல்கள் இவ்வாறு இருவர் பெயரையும் தாங்கி நிற்கின்றன.

புலமை விளையாட்டு

ஒரு முறை கவிராயர் அவர்கள் சுவாமிகளை நோக்கி, 'சங்கரதாஸ் சுவாமிகளே! உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும்போல் இருக்கின்றன’’ என்றாராம். உடனேசுவாமிகள் சிரித்துக்கொண்டே, 'கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக் கின்றனவே!' என்றாராம். புலவர்களின் விளை யாட்டுப் பேச்சுக்களிலேகூட இனிமை சொட்டு வதைக் காண்கிறோம். முள்ளும் முரடும், கல்லும் கரடும் என்பவற்றை மேலெழுந்தவாரியாகப்