199
- உள்நாட்டு முதலாளிகளை எதிர்த்து, சமாளித்துச் சோஷியலிசத்தை நிலைநாட்டுவதே கடினமானது என்று விவரம் அறிந்தோர் கவலை கொள்கின்றனர்.
- ஆனால், சோஷியலிசம் பேசிக்கொண்டே காங்கிரஸ் அரசு, பிரிட்டிஷ்-அமெரிக்க முதலாளிகளை இங்கு ஆதிக்கம் செலுத்த அழைக்கிறது. அவர்களும் இங்கு முகாம் அமைத்துக்கொண்டால், சோஷியலிசம் வெற்றிபெறுவது எளிதாக முடியக்கூடியதா!
வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிடப் பலத்துடன் இன்று முதலாளி முகாம் இருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுக்க முடியாது.
- தன்னை வரவேற்க வந்த காங்கிரஸ் அமைச்சரையே ஒருபுறம் போகச் சொல்லிவிட்டு, பிர்லாவுடன் மோட்டாரில் பேசிக்கொண்டே பவனி வந்தாராமே நந்தா கல்கத்தாவில் போனமாதம், அதிலிருந்தே புரியவில்லையா முதலாளிகட்குக் காங்கிரஸ் அரசிடம் உள்ள பிடிப்பு.
பச்சையாகவே பேசிவிட்டாரே காங்கிரஸ் அமைச்சர் படீல், சுயராஜ்யப் போராட்டக் காலத்தில் எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய்களைக் காங்கிரசுக்குக் கொடுத்தவர்கள் முதலாளிகள் என்று. மிரட்டும் குரலில் பிர்லாவும் பேசிவிட்டாரே, முதலாளிகளைக் காங்கிரஸ் சர்க்கார் பகைத்துக்கொள்ளக்கூடாது என்று.
இவைகளை எல்லாம் மக்கள் மறந்தேவிடுவார்கள் என்ற எண்ணத்தில், சோஷியலிசம் பேசிச் சுவை ஊட்டப் பார்க்கிறார்கள்.
சோஷியலிசத்தின் அடிப்படை ஒன்றைக்கூட அமைத்துக்கொள்ளாமல், சோஷியலிசத்துக்கு வெடிவைக்கும் போக்கை மாற்றாமல், சோஷியலிசம்பற்றிப் பேசுவது, எப்படிப் பொருளுள்ளதாகும்? என்ன பயனைத் தரும்?
இங்கே சோஷியலிசம் பேசுகிறார் காங்கிரஸ் தலைவர்; பிர்லா அறிவிக்கிறார் சென்றவாரம், அமெரிக்காவிலிருந்து: