பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

1881-ம் ஆண்டு பிறந்தவர் ஜான் நைஹார்ட் எனும் கவிஞர்; அவர் அந்த நாளிலேயே பாடிவைத்தார், தெளிவு பெற்ற ஏழை, விழிப்புற்ற பாட்டாளி என்னவிதமாகப் பேசுவான் என்பதனை.

“ஆணவக் கோட்டை
அமைத்திடுவோரே!
அடிமைகள் கண்டினி
நடுங்கிடுவீரே!

உலகிடை எழுந்திடும்
போர்கள் எதிலும்
இருப்பவர் யாமே
மறுப்பவருளரோ!

மன்னர் பெற்றிடும்
வலிவனைத்தும்
அளிப்பவர் யாங்கள்
அறிந்திடுவோமே.

ஞானிகளும் மோனிகளும்
முன்பு காட்டிய வழிகண்டு
காலகாலமாயுள கடுந்தளைகளை
உடைத்தெறிந்துமே

உலக இதயமதை
எம் முரசாகக்கொண்டு
இருளது விட்டு
வந்துளோம் வெளியே

அய்யோபாவம்! எனுமொழி
கேளோம்
ஐயமளித்திடும் கரமது
வேண்டோம்