பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

பேரூர் சமைத்தவர்க்கேன்
பிச்சைதானும்
என்றுதான் புரியுமோ
உமக்கிப் பேருண்மை.

குலப்பெருமை குடிப்பெருமை
விட்டொழிப்பீர்
வார்ப்படப் பொற்கடவுள்
வாணிபமும் விடுவீர்!

அவரவர் பெறும் தகுதி
ஆக்குந்திறன் வழியதாகும்.
உழைப்போர் நாங்கள்
உற்பத்தியாளர்
ஊமைகளாயிரோம்
இனியுந்தானே!

சுரண்டிடுவோரே!
சோம்பிக் கிடந்திடுவோரே;
பரவிப் பாய்ந்து வந்துளோம்
பாரினில்
பொழுது புலர்ந்தது
புவியெங்குமே, காண்!

இருளும் ஒழிந்தது
வாள் வெளிவந்தது.
உறையையும் வீசி
எறிந்தோம் கீழே!

தம்பி! கவிதையிலே குலுங்கிடும் எழுச்சியைக் கண்டனையா ! இவ்விதமான எழுச்சி முரசு கேட்டு உலாவந்து வெற்றிகண்ட முறை சோஷியலிசம்.