116
அவர் காட்டிய தியாகப் பாதையில் செல்வதென்பது அனைவருக்கும் சாத்தியமானதல்ல; ஆனால் அவருடைய தியாகத்தை மதிக்க மறுப்பவர், மறந்து திரிபவர், தமிழராகார், மனிதராகார்!
தமிழகம் விடுதலைபெறுவதற்கே இந்த வீரத்தியாகம் பயன்படப் போகிறது.
பிறப்பிற இடங்களில், இத்தகைய சம்பவம், கலகத்துக்கு, பலாத்காரத்துக்கு வழிகோலும்—காண்கிறோம்.
தமிழகத்தின் முறை தனித்தன்மை வாய்ந்தது; அறவழியின்படி உள்ளது.
அறம் வெல்லும், நிச்சயமாக வெல்லும்; அறம் ஆர்ப்பரிக்காது, அத்துமீறிய காரியத்துக்கு மக்களைச் செலுத்தாது; அதன் பயணம் துரிதமானதாக இராது—ஆனால் தூய்மையானதாக இருக்கும்.
அறம் நிச்சயமாக வெல்லும்—ஆனால் அது கடுமையான காணிக்கைகளைக் கேட்கும்.
மிகக் கடுமையான காணிக்கை தரப்பட்டாகிவிட்டது; வீரத்தியாகி உயிரை அர்ப்பணித்தார்.
தமிழக விடுதலைக்காக, நாமும் காணிக்கைதரத் தயாராகவேண்டும்; அந்தப் பக்குவம் நமக்கு ஏற்பட வேண்டும்; வீரத்தியகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல்வேண்டும். தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம்.
21—10—1956
அன்பன்,
அண்ணாதுரை