பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/209

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

207

தம்பி! செல்லாயி, கமலாம்பிகை—இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு.

ஆண்டி—தங்கப்பன் மருத்துவமனையில்!

செல்லாயி—கமலாம்பிகா அவரவர் மனையில்!!

இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா?

தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப்பட்டுவரும், ஆண்டியப்பன்!

வாடகை பாக்கிக்காக மூக்குத்தியை மார்வாடிக்கடையிலே விற்று விட்டு வீடு திரும்பும், அழகி செல்லாயிபோல என்றும் சொல்லலாம். காங்கிரஸ், கமலாம்பிகை போல ஆபரணச் சுமைதாங்கியாகக் காட்சி அளிக்கிறது! நம்மை, செல்லாயிபோல மூக்கும்முழியும், பார்த்தால் ராஜாத்தி போல இருக்கிறது என்று நல்லமனம் படைத்தோர் பாராட்டத்தான் செய்கிறார்கள். கமலாம்பிகையின் உடலில் புரளும் நகைகளைப் பார்த்தவர்கள், இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு ஆபரணச் சுமை கிடைத்திருக்கிறது என்று அருவருப்புடன் பேசுவது போலத்தான் இன்று, பொதுமக்கள், காங்கிரசிடம் உள்ள பணபலம் பற்றி அருவருப்புடன் பேசுகிறார்கள்.

இந்தக் கருத்தை எடுத்துக்காட்டவே நான் உனக்கு இந்த இருவேறு காட்சிகளைக் காட்டினேன்.

ஆபரணச் சுமை தாங்கியாக உள்ள கமலாம்பிகையின் மாளிகையில் வேலை செய்து பிழைக்கும் சிகப்பண்ணனே அல்லவா, அந்த மாது இருக்கும் அவலட்சணத்தை எடுத்துக்காட்டி அருவருப்பாகப் பேசுகிறான்—அது போன்றே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் அவதிப்பட்டு வரும் மக்கள், அந்தக் கட்சியிடம் குவிந்து கிடக்கும் பணபலத்தைக் கண்டு அருவருப்புடன்தான் பேசுகிறார்கள். செல்லாயி விஷயத்தில் ஆதரவு காட்டிப் பேசுவது போலத்தான், பணபலமற்ற நமது கழகத்தைக் குறித்துப் பேசுகின்றனர்.

ஊழல் மிகுந்த ஆட்சி, உதவாக்கரைத் திட்டமிடும் ஆட்சி, முதலாளிக்குச் ‘சலாமிடும்’ ஆட்சி, வெளிநாடு-