249
வங்கமும்—பீகாரும் இணையும் என்று கூறினார், வங்க முதலமைச்சர் டாக்டர் ராய்! இஃதன்றோ தேசீய — இதுவன்றோ பாரதப் பண்பாடு என்று அங்கிருந்து மகிழ்ந்து வாழ்த்தினார் நேரு பண்டிதர். இங்கிருந்தபடியே ஆசிகூறினார் ஆச்சாரியார்! ஆனால், வங்க மக்கள் செய்தது என்ன?
கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பினர்—டாக்டர் ராய்மீது! அவர் ‘தேசீய ஒற்றுமை’ பேசித்தான் பார்த்தார்! “நான் தெரியவில்லையா? உங்கள் தலைவன்! வங்கத்துக்கு வாழ்வளிப்பவன்! உங்கள் சுகமே என் சுகம் என்று எண்ணிப் பணியாற்றும் ஊழியன்!” என்று ஏதேதோ பேசினார்! அவருடைய பேச்சுக்குப் பக்க பலமாகப் போலீசும் பட்டாளமும் நின்றது! எனினும் சிங்கக் குணம் படைத்த வங்க மக்கள், ‘இணைப்பு’ எமக்கு வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர்—டாக்டர் ராயைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றினர்—“தள்ளாத வயதிலே, இந்த எதிர்ப்புத் தருகிறீர்களே, தகுமா?” என்றார். ‘எதிர்ப்பு உம்மீது அல்ல; எம்மைத் துச்சமாக மதித்த உமது போக்கினை எதிர்க்கிறோம்’, என்றனர் வங்க மக்கள்! ஆர்ப்பரிப்பு அமளியாற்று! அடக்கு முறை, அமளியைக் காட்டுத் தீயாக்கிற்று! வங்கமும் பீகாரும் இணைந்து ஒரு பேரரசாகும் என்று பேசிவிட்டு வந்த டாக்டரே, பிறகு. இணைப்பு இல்லை! வங்கம் வங்கமாகவே இருக்கும்! என்று அறிவித்தார்! மக்கள் வெற்றி பெற்றனர்.
இதுபோல, வடக்கே, ஒவ்வொரு மாநிலத்தாரும் தத்தமது உரிமையைப் பாதுகாத்துக் கொண்ட பிறகு, தேசீயக் காலட்சேபம் செய்கிறார்கள்!
விருந்தினை முடித்துக்கொண்டு, பட்டுப்பட்டாடை அணிந்துகொண்டு, பீடத்தில் அமர்ந்து, விரலில் உள்ள வைர மோதிரத்தைப் பளபளப்பாக்கிக் கொண்ட பிறகு,
- வாழ்வாவது மாயம்
செல்வம் ஒரு பிசாசு
என்று வேதாந்தம் பேசும், பாகவதரைப் பார்க்கிறோமல்லவா, அதுபோல் வடக்கே உள்ள தலைவர்கள் இங்கு வந்து நமக்குப் பேசுகிறார்கள்—வேறென்ன!
தம்பி! வடக்கே உள்ள மக்கள், தத்தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதிலே, தவறுவதில்லை. அதற்கான உரிமைக் கிளர்ச்சிகளிலே மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல, அந்தக் கிளர்ச்சிகளில்,
அ.க. 4.— 16