பக்கம்:தம்ம பதம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் பதினான்கு

புத்தர்

177.எவரும் வெல்ல முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர்; இந்த உலகில் எவரும் அணுக முடியாத வெற்றியை அடைந்தவர் புத்தர். அவர் எல்லையற்ற உணர்வுடையார்; (பிறப்பும் இறப்புமாகிய) பாதையற்றவர். அத்தகைய புத்தரை வழியில் இழுத்துச் செல்ல முடியும்? (1)

178. வலைபோன்றதும், விஷம் போன்றதுமான ஆசைத்தனை, எதனாலும் வழி தவறாத புத்தரை எல்லையற்ற உணர்வுள்ளவரை-(பிறப்பும் இறப்புமாகிய) பாதையற்றவரை-எந்த வழியில் இழுத்துச் செல்ல முடியும்? (2)

179. கருத்தோடு தியானத்தில் ஆழ்ந்தவராயும், பற்றரற்ற விடுதலையில் திளைப்பவராயுமுள்ள மெய்யறிவு பெற்றவரைக் கண்டு தேவர்களும் பொறாமைப்படுகிறார்கள். (3)

180. அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல்;

அரிது அரிது மானிட வாழ்க்கை;
அரிது அரிது நல்லறம் கேட்டால்;
அரிது அரிது புத்த நிலை அடைதல்.

(4)

181. சகல பாவங்களையும் நீக்குதல், நற்கருமங்களைக் கடைப்பிடித்தல், உள்ளத்தைச் சுத்தம் செய்தல் - இதுதான் புத்தருடைய உபதேசம். (5)

182. ‘நெடுங்காலம் துன்பத்தைத் தாங்கும் பொறுமையே முதன்மையான தவம் நிகரற்ற உயர்ந்த பதவி நிருவாணமே’ என்று புத்தர்கள் கூறுகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/49&oldid=1381846" இலிருந்து மீள்விக்கப்பட்டது