பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

களை என்றென்றும் நம் நெஞ்சக் கோயிலில் வைத்து அவர் தம் நினைவைப் போற்றுவோம்.

இந்நூலின் அச்சுப்படிகளைப் பிழையறத் திருத்தி யுதவிய மன்ற ஆட்சியாளர்கள் புலவர் தணிகை உலகநாதர், மி. ச. நடேசன், ப. கி. பொன்னுசாமி, மா. இரா. வஞ்சிக்கோவன் ஆகியோருக்கு மன்றத்தின் நன்றி என்றென்றும் உரியதாகும்.

அச்சிட்டு உதவிய மூவேந்தர் அச்சகத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இந்நூலினை ஏற்றுப் போற்றுவதன் வாயிலாக மன்றத்தின் தொண்டு சிறக்க உதவுமாறு தமிழ்ப் பெருமக்களையும்—சிறப்பாக மாணவ மணிகளையும் விரும்பி வேண்டிக் கொள்கிறோம்.


மாணவர் மன்றம்,
சென்னை-600 001
14-4-1989
இங்ஙனம்,
கோ. வில்வபதி
தலைவர்.