௧௪௪
முன்னுரை
'பிராமணன் வேதம் ஓதுகையில் சூத்திரன் அருகே இருக்கக் கூடாது. அவ்வாறு கேட்ட சூத்திரன் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்'
'பிராமணர்களை அவமானம் செய்யக் கூடாது'
'இரவு நேரங்களில் பிராமணன் சூத்திரனோடு வழி நடக்கக் கூடாது.'
'பிராமணனை அடிக்கக் கைதுாக்கினாலே நரகம்'.
'பிராமணன் துன்பம் தந்தாலும் அவனை அவமானப்படுத்தக் கூடாது'
'எவனும் தன் குலத்தை மறைக்கக்கூடாது.' -
'பிராமணன் தன் தாய், தந்தை, குரு இவர்களின் பசிக்காக எந்த உயிரையும் கொல்லலாம்'.
.
- இவ்விடத்தில்,
'ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
- என்னும் திருக்குறள் கூறும் தமிழறத்தை ஓர்க.
'பிராமணன் உணவுக்காகவே எல்லா உயிர்களும் பிரமனால் படைக்கப்பட்டன.'
'பிராமணனைக் காப்பாற்றப் பொய் சொல்லலாம்'
'சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்'.
'சூத்திரன் பிராமணர்களின் பெயர் சாதி முதலியவற்றைச் சொல்லித் திட்டினால், பத்து அங்குலமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய