திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
கருக
'மனுவால் எந்த வர்ணத்தார்க்கு என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ அதுவே வேத சம்மதமாகும். ஏனெனில் அவர் வேதமுணர்ந்த பிர்ம்ம ஞானி'
“எவனொருவன் இந்த மனுசாஸ்த்திரத்தைத் தர்க்க ரீதியான யுக்தியினால் ஆட்சேபிக்கிறானோ, அவனை ஊரைவிட்டுத் துரத்திவிட வேண்டும். ஏனென்றால் அவன் வேத நிந்தகனான நாஸ்திகன் ஆவான்'
'வேதத்தில் சொல்லப்பட்டவைதாம் தர்மம், வேதத்தில் மாறுபடச் சொல்லியிருந்தாலும் அது தர்மமே!'
'பிராமணனிடம் அரசன் தீர்வை பெறக்கூடாது. அவன் பசியினால் துன்பப்படும்படி வைக்கக் கூடாது; பிராமணன் துன்பப்படும் நாடு அழியும், தந்தை தன் பிள்ளைகளைக் காப்பது போல் அரசன் பிராமணர்களைக் காக்க வேண்டும். அரசன் பிராமணர்களுக்கு உதவினால் நாடு விருத்தியடையும்'
'வழக்குகளை விசாரிக்கத் தனக்கு அடுத்தபடி பிராமணனையே அரசன் அமர்த்த வேண்டும். பிராமணர்க்ள் இல்லாததை நீதிசபை எனலாகாது. சூத்திரன் ஒருபோதும் வழக்கை விசாரிக்கக் கூடாது.'
'பிராமண குலத்தில் பிறந்தவன் கர்மானுஷ்டானம் இல்லாதவனாயினும், ஒழுக்கம் கெட்டவனாயினும் அரசனைப் போலவே தீர்மானம் செய்யலாம். (அஃதாவது ஆட்சி செய்யலாம். பிறரைத் தண்டிக்கலாம், சூத்திரன் ஒரு போதும் அப்படிச் செய்யலாகாது.'
'பிராமணன் சூத்திரன் தேடிய பொருளைச் சந்தேகமில்லாமல் கொள்ளையிடலாம்'
'பிராமணன்பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லவேண்டும். ஆனால் பிராமணன் சூத்திரனுடைய பொருளைத் தன்