திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௧௫௩
'பறையன் சாட்சியை அரசன் ஏற்றுக்கொள்ளக்கூடாது
'பிராமணன் பால்காரன், வணிகன், மிட்டாய் விற்கிறவன், சிற்பி,பாடகன், ஏவலன் - ஆகிய இவர்களுள் ஒருவனாக இருந்தால்அவனைச் சூத்திரனாக மதிக்க வேண்டும்'
'பிராமணர்களைக் காப்பாற்றப் பொய் சொல்லலாம் அதற்காகப் பிராமணரல்லாதவனைக் கொன்றாலும் பாவமில்லை'
'பிராமணனைத் தவிரப் பிற மூன்று வர்ணத்தார்க்கும் தண்டனை தப்பாமல் கொடுக்கவேண்டும்'
'பிராமணனைத் திட்டினால் மற்ற மூன்று வர்ணத்தார்க்கும் அரசன் கட்டாயம் தண்டனை கொடுக்கவேண்டும்'
'பிராமணனைக் கொடுமை செய்தவனுக்கும் கட்டாயம் பலவாறான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்’
'பிராமணன் பசுக்களை அபகரித்தவனுக்குக் காலை வெட்ட வேண்டும்'
'பிராமணனைக் காப்பாற்ற ஒருவனைக் கொலை செய்தவனுக்கு அரசன் தண்டனை கொடுக்கக் கூடாது'
'சூத்திரன் மற்ற மூன்று வர்ணத்தாருடைய மனைவியரைப் புணர்ந்தால் அவனை உயிர் போகும் வரை தண்டிக்க வேண்டும்
'கட்டுக் கடங்காமல் இஷ்டப்படி திரியும் பிராமணப் பெண்களைச் சூத்திரன் புணர்ந்தால் அவன் ஆண்குறியை அறுக்க வேண்டும். ஒருவனின் கட்டுக்குட்பட்ட பெண்களைப் புணர்ந்தால் அவனைத் துண்டு துண்டாய் வெட்டி அவன் பொருளையெல்லாம் கொள்ளையிட வேண்டும்'