பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௩௧


மனத்தின் அமையா தவரை எனைத் தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று

825

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று

929


14. கட்டளை முறை:(கட்டளையிடுகின்ற வகையில் கூறுதல்)


நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்

113

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினும் இல்லை உயிர்க்கு

122


15. ஆய்வு முறை:(ஆய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டிய வகையில் கூறுவது)


பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்

805

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

247


16.அங்கத முறை:(கிண்டலாகக் கூறுவது)


கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லா திருக்கப் பெறின்

403

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலாள்

தாளுளாள் தாமரையி னாள்

611


17.நகை முறை: (நகைச்சுவையுடன் கூறுவது)


தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

1073

வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று

1317


18. தொகுப்பு முறை:(பல உண்மைகளை நிரல்பட தொகுத்துக் கூறுவது)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

1085

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம் புலனும் ஒண்டொடி கண்ணே உள.

1101