பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை



வெளியீட்டுரை

துரை மா. பூங்குன்றன். அறி.இ. க.மு., மெய்.மு.


நம் பாவலரேறு ஐயா அவர்கள் இயற்கையின் இயக்கங்கள் அமைப்புகள், போக்குகள் அனைத்தையும் மெய்ப்பொருளறிவோடு பொருத்தி இவை ஒரு நெறியோடுதான் இயங்க வல்லன எனக் கூர்ந்தாயும் பழக்கம் உள்ளவர்கள். அனைத்து வாழ்வியல், அறிவியல் அறிவும் உள்ளடக்கியதுதான் மெய்ப்பொருளறிவு என முறைப்படுத்திக் கொண்டவர்கள்.

எனவே, திருக்குறளின் கருத்துகள் மெய்யறிவுப் பார்வையில் பார்க்கத் தக்கன எனப் பார்வையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அப்பார்வையில் மிகவும் புதுமையான பொருள்களை ஆங்காங்குத் திருக்குறளைப் பற்றிய சொற்பொழிவுகளில் வெளிப்படுத்துவார்கள் அரசியல் நெருக்கடிக் காலமான 1975-76 ஆம் ஆண்டுகளில், அற்றை அரசு இவ்வுலக நடைமுறை வாழ்வினின்று பிரித்து ஓராண்டுக் காலம் ஐயா அவர்களைத் கொடுஞ்சிறையில் வைத்திருந்த காலத்தில்தான் திருக்குறளை மெய்ப்பொருள் நோக்கில் நோக்கி, அதைச் சார்ந்தே உரையெழுத அவர்களுக்கு எண்ணம் எழுந்தது.

இயல்பாகவே ஐயா அவர்களின் மெய்ப்பொருள் நோக்குக்குத் திருக்குறள் மிகவும் பொருந்தி வந்ததை உணர்ந்தார்கள். தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வை வெளிப்படுத்தத் திருக்குறளை ஒரு களமாக எடுத்துக்கொண்டதாகவும் கூறினார்கள்.

நெருக்கடிக் காலச் சிறையின்று வெளிப்பட்டபின், தாம் எழுதிய உரைக் குறிப்புகளைப் படியெடுக்கவும் பிரிக்கவும் துணையாளர்கள் தேவைப்பட்டனர். அப்போது அப்பணிச் சுமை பற்றி அனைவரி