பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெஃகாமை

ஒரு பாவி-நிகரில்லாத பாவி.

அழுக்காறு செல்வம் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்குமென்று இது கூறிற்று. ௨௯௯.

ழுக்கா றுடையாற் கதுசாலும், ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.

இ-ள்:- அழுக்காறு உடையாற்கு-அழுக்காற்றை யுடையானுக்கு, ஒன்னார் கேடு என்பது வழுக்கியும்-பகைவர் கேடு பயத்தல் தப்பியும், அது சாலும்- அவ்வழுக்காறு தானே அமையும்.

இஃது, அழுக்காற்றால் உயிர்க்கேடு வரு மென்றது. ௩00.

௩௧-வது.-வெஃகாமை.

வெஃகாமையாவது, பிறர் பொருளை விரும்பாமை. [தன்னயத்தைக் காரணமாகக் கொண்ட கூடாவொழுக்கங்களுக் கெல்லாம் வெஃகுதல் காரணமாதலால், இவ்வதிகாரம் அழுக்காறாமையின் பின் கூறப்பட்டது.]

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம், விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

இ-ள்:- வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க-பிறர் பொருளை விரும்பி ஆகும் ஆக்கத்தை வேண்டாதொழிக; விளைவயின் ஆம் பயன் மாண்டற்கு அரிது -(அது) பயன்படுங்காலத்தில் ஆகும் பயன் நன்றாதல் இல்லையாதலான்.

[மாண்டற்கு அரிது-மாட்சிமைப்படுதற்கு அரிது-மாட்சிமைப்படுதல் இல்லை-நன்றாதல் இல்லை.]

இது, வெஃகலால் ஆகும் ஆக்கம் நல்ல பயனை நல்காதென்று கூறிற்று. ௩0௧.

௧0௯