பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்ளாமை

இ-ள்:- கொல்லான் புலாலை மறுத்தானை-கொல்லானுமாய்ப் புலாலையுண்டலைத் தவிர்த்தவனுமாய் நிற்பானை; எல்லா உயிரும் கைகூப்பி தொழும்-எல்லா உயிரும் . கூப்பித் தொழும். [கை கூப்பி - கைகுவித்து.]

இது, புலாலுண்ணாதான் தேவர்க்கு மேலாவ னென்றது. ௧௮௯.

ண்ணாமை யுள்ள துயிர்நிலை; ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு.

இ-ள்:- (ஊன்) உண்ணாமை உயிர் நிலை உள்ளது-ஊனை உண்ணாமையினால் உயிர் நிலையைப் பெறுதல் உள்ளதாம்; ஊன் உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது-ஊனை உண்ண (உண்டாரை எல்லா உலகத்தினும் இழிந்த) நரகம் (விழுங்கிக் கொண்டு) அங்காவாது. .

அங்காவாமை-புறப்பட விடாமை-[வெளிப்பட விடாமை.]

[உயிர் நிலையைப் பெறுதல்-உயிர் பிறப்பிறப்பின்றி நிற்றல்-வீடு.]

இஃது, ஊன் உண்ணாதார் வீடு பெறுவா ரென்றது. ௧௯0.

௨0-வது.-கள்ளாமை.

கள்ளாமையாவது யாதொரு பொருளையும் களவிற் கொள்ளாராதல். [கொலைக்கும் புலைக்கும் பின்னர்த் தவிர்க்க வேண்டுவது களவாதலால், இவ்வதிகாரம் அவற்றின் பின் கூறப்பட்டது.]

ள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

இ-ள்:- எள்ளாமை வேண்டுவான் என்பான்-பிறரால் இகழப்படாமையை வேண்டுவான் (இவன்) என்று சொல்லப்படுமவன், எனைத்து ஒன்றும் கள்ளாமை-யாதொரு பொருளையும் களவில் கொள்ளாமல், தன் நெஞ்சு காக்க-தன் நெஞ்சைக் காக்க.

இது களவு ஆகா தென்றது. ௧௯௧.

௬௯