பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

ளவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

இ-ள்:- களவு என்னும் கார் அறிவு ஆண்மை-களவாகிய பொல்லா அறிவுடைமை, அளவு என்னும் ஆற்றல் புரிந்தார் கண் இல்-நேர்மையாகிய பெருமையைப் பொருந்தினார் மாட்டு இல்லை.

இது நேர்மையை அறிந்தவன் களவு காணா னென்றது. ௧௯௯.

ளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு,

இ-ள்:- அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல-நேர் அறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறு போல, களவு அறிந்தார் நெஞ்சில் கரவு நிற்கும்-களவு அறிந்தவர் நெஞ்சில் வஞ்சகம் நிற்கும்.

இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று தவிர்க்க முடியா தென்றது. ௨ 00.

௨௧-வது.-தீவினையச்சம்,

தீவினையச்சமாவது, தீவினைகளைப் பிறருக்குச் செய்யாமை.

[இல்வாழ்வார் விலக்க வேண்டிய கொடிய பாவங்களில் மேல் விதந்து கூறாதவற்றையெல்லாம் பொதுவகையாக இவ்வதிகாரத்தால் கூறுகின்றார்.]

ன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

இ - ள் :- தன்னைத் தான் காதலன் ஆயின்-தனக்குத் தான் நல்லவனாயின், எனைத்து ஒன்றும் தீவினைப்பால் துன்னற்க-யாதொன்றாயினும் தீவினைப் பகுதியாயினவற்றைச் செய்யா தொழிக.

[யாதொன்றாயினும்-ஒரு சிறிதும்.]

இது, தீவினைக்கு அஞ்சவேண்டு மென்றது. ௨0௧.

௭௨