பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழுடைமை

இ-ள் :- ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்-பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்-(அதுவும் பெரிதாவது) பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.

இது, தவம் பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது. ௨௩0.

௨௪-வது.-புகழுடைமை.

அஃதாவது, புகழ்பட வாழ்தல். [புகழ், வள்ளியோரால் செய்யப்படுவதொன் றாதலின், இவ்வதிகாரம் செல்வரால் செய்யப்படும் ஈகையின்பின் கூறப்பட்டது.]

தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

இ-ள்:- தோன்றின் புகழொடு தோன்றுக-பிறக்கின் புகழ் உண்டாகப் பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-புகழ் இல்லார் பிறத்தலின் பிறவாமை நன்று.

இது, புகழ்பட வாழவேண்டு மென்றது. ௨௩௧.

தல் இசைபட வாழ்தல்; அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு.

இ-ள்:- இசைபட வாழ்தல் ஈதல்-புகழ்பட வாழ்தலாவது கொடுத்தலே; அது அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை-கொடையான் அல்லது உயிர்க்கு இலாபம் (வேறொன்று) இல்லை.

இது, புகழ் உண்டாம் ஆறு கூறிற்று. ௨௩௨.

ரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.

௮௩