பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை.


செயற்கரிய செய்தும், சொலற்கரிய சொல்லியும் வருகிற காங்கிரஸ் தலைவர் அவர்கள் இந்நூலுக்கும் தலைமை தாங்குகிறார்கள்.

அன்பை மதிப்பவர்கள் அவரை வாழ்த்துவார்கள்.

அறத்தை வாழ்த்துபவர்கள் அவரை மதிப்பார்கள்.

தியாகத்தை வழிபடுபவர்கள் அவரை வணங்குவார்கள்.

தேசபக்தியைப் பேணுபவர்கள் அவரை வழிபடுவார்கள்.

அவர்: மதிப்புக்குரிய முதுபெருந்தலைவர் திருமிகு: காமராஜ்.

அவர்: தமிழ்நாட்டுக் காந்தி.

என்றென்றும் நம்மிடை வாழ வல்ல ஆசிய ஜோதியாம் நேருபிரான் முன்பு தமிழகத்துக்கு வருகை புரிந்த தருணத்திலே, தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவிப் பொறுப்பேற்றிருந்த திரு காமராஜ் அவர்களை. "தமிழ் நாட்டுக் காந்தி" என்று புகழ்ந்து போற்றினார்.

காமராஜ் அவர்களைப் பற்றிச் சொல்ல ஆயிரம் பக்கங்கள் போதாது. ஆனாலும் அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லும் பேறு பெற்றுத் தன்னிறைவும் தன்னமைதியும் பெற பழகி வரும் சமுதாயம் விரிந்து