பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்63

 பட்டிருந்த வேளையிலும், பிறவிப் பெருமாள் சோம்பேறித் தனமாகப் படுக்கையில் கிடந்து சுகம் அனுபவித்துக் கொண்டிருந்தார். அவசரம் இல்லாமல் எழுந்தார். திண்ணையில் சிறிது நேரம் உட்கார்த்திருந்தார். பல் துலக்குவதற்காக நந்தவனம் பக்கம் சென்றார்.

நந்தவனம் குளுமையான இடம். பூச்செடிகள், கனிமரங்கள் எல்லாம் எழில் குலுக்கி நின்றன. பசும் கரம்பை பதிக்கப்பட்டு, மணல் பரப்பப் பெற்ற ஒரு மேடும் இருந்தது, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து பல் துலக்குவது முதலாளியின் நித்திய அனுஷ்டானங்களில் ஒன்று ஆகும். 'தந்த சுத்தி’ எனும் பெயரில் அரை மணிக்கு அதிகமாகவே அவர் போக்கடிப் பதில் வேறு ஒரு லாபமும் உண்டு. நந்தவனத்துக் கிணறு 'நல்ல தண்ணீர்க் கிணறு' என்ற சிறப்புப் பெற்றிருத்தபடியால், அக்கம் பக்கத்துப் பெண்கள் அங்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வருவார்கள். முதலாளியின் கண்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். தோட்ட வேலை பார்க்கும் பெண்களின் கட்டான உடலின் சில பகுதிகளைப் பார்க்கும் பாக்கியமும் கிட்டும். அப்போது அருமையான 'ஸ்ட்ராங் காப்பி' பருகிய உற்சாகமும் தெம்பும் பிறவிப் பெருமாளுக்கு ஏற்படும்.

இன்றும் அவருக்காகக் கண் விருந்து காத்திருந்தது, இருளம்மை உருவிலே.

தோட்டத்தில் வழக்கமாக வேலை செய்பவள் இருளம்மை அவள் புருஷனும் பண்ணையில் உழைப்பவன்தான். அவள் தன் சிறு பெண்ணையும் உடன் இட்டு வந்திருந்தாள். அது அழுததே என்று 'கொய்யாப் பழம்' ஒன்றைப் பறித்து அதனிடம் கொடுத்திருந்தாள். கையில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்