பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்73

 உச்சி வேளையில் கூட அந்தக் காட்டாற்று நீர் ஜில்லென்றுதான் இருக்கும்.

அந்த ஆற்றின் ஒட்டமும், சற்று தள்ளி இன்னொரு பள்ளத்தில் நீர் விழுகிற ஒலியும், அதற்கும் அப்பால் காடுகளினூடே நெளிந்து சென்று அது ஒரு மலைமுடியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அருவியாக இறங்கும் தடதட ஒசையும் பகலில் எப்போதும ஏதோ ஒரு பின்னணி சங்கீதம் போல் கேட்டுக் கொண்டே இருக்கும்,

இப்போது, நள்ளிரவில் இவ்வோசைகள் எல்லாம் கனத்து, தனித்தனி சத்தங்களாகவும், ஒன்றோடொன்று குழம்பியும் ராமலிங்கத்தை அச்சுறுத்தின. இனம் புரிந்த கொள்ள முடியா வண்டுகளின் ரீங்காரமும், இரவுப் பறவைகளின் கூச்சலும் சதா கேட்டுக் கொண்டே இருந்தன. காற்றின் கூப்பாடு வேறு.

தன்னந் தனியாக, மலைநம்பி கோயிலுக்குள், இரும்புக் கம்பிகளாலான கதவின் பின்னே, குறு குறு வென்று உட்கார்ந்திருந்த ராமலிங்கம், உண்மையான பயம் எப்படி இருக்கும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தான்.

அவனுக்குத் துணையாக மலைநம்பி சிலையைத் தவிர, அரிக்கன் லாந்தர் ஒன்றும் இருந்தது. மிகவும் சிறிதாக ஒளி சிந்தும் வகையில் அதன் திரி உள்ளுக்கு இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

“இப்படி ஒரு ஏற்பாட்டுக்கு நாம் ஒப்புக் கொண்டது மடத்தனம்’' என்று ராமலிங்கம் எண்ணலானான் துணிச்சலான காரியம் என்றும், புதுமையான சோதனை என்றும் முதலில் அவன் நினைத்தது அசட்டுத்தனமேயாகும் என்று இப்போது அவனுக்குப் பட்டது.