பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்93


"அவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கும்!" என்றார் மர்மக் கதை மன்னன்.

அங்கே புதிதாக வந்த பத்திரிகைத் துணை ஆசிரியர் சாந்தப்பன், 'இங்கே என்ன மாநாடு?' என்றார் இடக்காக.

காதல் மாநாடு’ என்று மகாகவி பதில் சொன்னார்.

"காதலி தென்படலையே?" இது சாந்தப்பன்.

'அதுக்குத்தான் சிநேகவல்லியை தேடுகிறோம்' என்று மர்மக்கதை அறிவித்தார்.

"சிநேகமா! அவள் இங்கே எங்கே வந்தாள்?" என்று கேட்டார் சாந்தப்பன்.

"ஏது உங்களுக்கும் அவளுக்கும் உறவு நெருக்கமோ?" மகாகவி.

"இல்லே இல்லே. சும்மா கடிதத் தொடர்பு" அவ்வளவுதான்.

"உங்களுக்கும் அவள் எழுதுகிறாளா?" என்று அதிர்ந்து போனார் நாவலாசிரியர்.

'"ஊம்ங்...யார் யாருக்கெல்லாமோ எழுதுறாள்னு கேள்விப்பட்டேன். ஏன் அப்படிச் செய்கிறாள்னுதான் புரியலே. என்றார், சாந்தப்பன்.

மர்மக்கதை மன்னன் குரல் கொடுத்தார்; "அதை நாம் கண்டுபிடித்தே தீரனும்."

'அதுக்கு ஒரு வழி செய்வோம்' என்றார் மகாகவி.

என்ன, என்ன என்று அவர் முகத்தை நோக்கி னார்கள், மற்றவர்கள்.

"எனது கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. நீங்கள்தான் அதை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், முதல் பிரதி பெற்று