பக்கம்:நலம் தரும் நாட்டு மருந்துகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32


எலும்புருக்கி

இலங்தைப் பட்டையை நன்றாக இடித்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் அறுகம்புல்லையும் சேர்த்துப் பசும்பாலில் அரைக்கவும். ஒரு வாரம் காலையில் உண்டு வரவும்.

தாது விருத்திக்கு

காய்ச்சிய பசும்பாலில் முந்திரிப் பருப்பும், கற்கண்டும் சேர்த்து இரவினில் உண்டு வரவும். தாது வலுவைத் தருவதோடு போகம் அதிகரிக்கச் செய்யும். தேகம் குளிர்ச்சியாகும்.

பவுத்திரப் பூச்சிக்கு

எட்டி இலையை மை போல் அரைத்துச் சிறு வில்லையாகத் தட்டி பவுத்திரமுள்ள இடத்தில் கட்டி வரவும். பூச்சிகள் வெளிப்பட்டு, மடிந்துவிடும்.

கர்ப்பமுண்டாக

கொச்சைக் காயிலையுடன் கொஞ்சம் மிளகும் பூண்டும் சேர்த்தரைத்துத் தின்னவும். அல்லது முன் விழுதில் ஆமணக்கெண்ணெய் விட்டுக் குடித்தாலும் கர்ப்பமுண்டாகும். பத்தியமாக இருக்கவேண்டும். நிலப்பனைக் கிழங்கை நெய்யிலிழைத்து உட்கொள்ளவும் கர்ப்பமாகும்.

பல் நோய்க்கு

மாதுளம் பூ, கடுக்காய், அரசிலைச்சாறு விட்டரைத்து அச்சாற்றில் கலக்கி இகசியம் (மூக்கில் பொடியை ஏற்றுவதுபோல) பண்ணி வரவும். பத்தியமாக இருக்க வேண்டியது.