பக்கம்:நல்லவனும் நய வஞ்சகனும்-மொழிபெயர்ப்பு.pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36

மனிதர்கள் பலரும் அவனுக்குப் பழக்கமாயினர். அரசர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் அங்கு விஜயம் செய்து குளித்து விட்டு ஆயிரம் தினார்கள் அளிப்பது வழக்கமாயிற்று. ஒரு நாள் அரசருடைய மாலுமிகளின் தலைவர் அங்கு வந்திருந்தார். அவருக்கு அபு ஸிர்ரே வேண்டிய செளகரி யங்களையெல்லாம் செய்தான். அவர் குளித்து முடிந்தவுடன், அவன் அவருக்கு கனிகளும், பழரசமும், காப்பியும் அளித்தான். அவர் எதோ பணத்தை எடுத்துக் கொடுக்க முன்வந்ததைக் கண்டு, அவன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டான். அன்று அவன் காட்டிய பெருந்தன்மை பின்னால் அவன் உயிரையே காக்க உதவிற்று.