பக்கம்:புகழ்மாலை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் சுரதா

49


ஏழைகளைச் சிரிக்க வைத்தவன்


வானகத்தச் செங்கதிரைப் போல, மூக்கு
    வாங்கிவிட்டுக் கொண்டுவரும் காற்று போல,
ஆனைமுதல், ஆழ்கடலின் பொருள னைத்தும்,
    அகிலத்தில் அனைவர்க்கும் சொந்த மாகும்.
ஏனிந்த பேதங்கள் பிறகு? ஏழை
    இனம் ஒன்று இருப்பானேன்? மிரண்டு பார்க்கும்
மானழகு விழிப்பெண்டி ரோடு கொஞ்சி
    மாடியிலே வாழ்வானேன், மற்றோர் கூட்டம்?

காரல் மார்க்ஸ் இவ்வாறு எண்ண மிட்டான்;
    கண்டித்தான்; பொருளறிவு நூலைத் தந்தான்.
பாரனைத்தும் மேன்மை பெற, மேலே ஏறப்
    படிபோன்று இருந்துவரும் அந்தநூலின்
சாரத்தை இம்மனிதன் உணர்ந்து, மக்கள்
    சரித்திரத்தைத் திருப்புதற்குத் தீர்மா னித்து,
வாரத்தால், மாதத்தால், முதிர்ந்த, சொந்த
    வாழ்நாளை நாட்டுக்கே அர்ப்பணித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/51&oldid=1491453" இலிருந்து மீள்விக்கப்பட்டது