இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50
புகழ் மாலை
கடவுளர்கள்.பூசுரர்கள்.ஆதாம்,ஏவாள்,
கலிகால தெய்வங்கள்; அறிவு தன்னைக்
குடை சாய்க்கும் மதமனிதர், எவரும் இந்தக்
குவலயத்தில் இதுவரையில் செய்திடாத,
வெடிவானத் திடிப்புரட்சி செய்து, ஏழ்மை
வேதனையைப் போக்கியவன் இந்த குள்ளன்!
தடையாவும் தூள்! தூள்!! தூள்!!! சாரின் ஆட்சி
தவிடுபொடி;இவனாலே,ருசிய நாட்டில்!
இருட்டாக இருந்திட்ட ருசிய நாட்டுக்
கிவன் ஒருவன் இல்லாது போயியிருந்தால்;
திருட்டுக்கள்;தீச்செயல்கள்;பசியினாலே;
தினந்தோறும் இறப்பவரின் கணக்கு; செல்வம்
பெருக்கிவரும் பணக்காரன், ஏழை, என்னும்
பேதங்கள் இருந்தபடி இருந்திருக்கும்!
எரிக்கின்ற நெருப்பாக இருந்து வந்த
இவன்தான் காண் லெனின் என்னும் புரட்சி வீரன்!